பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்கலாம்.
Posted On September 12,2011,By Muthukumar
பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?
என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது
குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும்,
பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல.
ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி
செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை
வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர்
கூறிய அறிகுறிகள் இவைதான்…
பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு
ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில்
உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண்
என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும்.
அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர்
முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது
வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள்
படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே
ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால்
அது மிதக்கும்.
கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக்
காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள்
மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான
அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும்,
உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.
No comments:
Post a Comment