Labels

Wednesday, December 2, 2015

அரிசி சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள்



5 அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழநதைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால்
மஞ்சள்காமாலை வரும் என்று சில பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. அதே நேரம் இப்பழக்கம் ஆரோக்கியமானதும் இல்லை. 
 
அரிசியைமெல்லுவதால் பல சத்துக்குறைவுநோய்கள் ஏற்படும். எப்போதும் அரிசியை மென்று கொண்டி ருந்தால் பசி குறைந்துவிடும். அரிசியில் மாவுச்சத்து ஒன்றுதான் பிரதானம். இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது.  இதனால் ரத்தசோகை, பார்வைக் குறைபாடு, தோல்நோய்கள், புரத சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறைநோய்கள் என்றுபல நோய்கள் குழந்தைகளைத்தாக்கும் அபாயம் உள்ள‍தால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

Tuesday, September 29, 2015

Black Magic.Vasiyam,Aaan Pen Vasiyam,Class In Chennai

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

Tuesday, August 18, 2015

எடை அதிகரிக்க விருப்பமா?


உடல் எடை அதிகமாக இருப்போர், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். எடையை அதிகரிக்க, அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
ஏனெனில், சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே, எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.
புரோட்டீன்: புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன் போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு எளிதான வழி. அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.
கொழுப்புகள்: பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10 சதவீதம் கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.
உடல் எடையை அதிகரிக்க, அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும், ஆப்பிள் உட்பட சத்துமிக்க உணவு வகைகளை உட்கொள்ளலாம்.
அதிகளவு ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அமிர்தம் கூட நஞ்சாகும்.

Thursday, August 6, 2015

குழந்தை பாக்கியம்தரும் துரியன்பழம்


துரியன் பழம் மக்களிடம் மிகவும், பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை.
ஏனெனில் துரியன் பழம் சாப்பிடுவதால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என சில மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கூற்றில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என தெரியவில்லை.
இருப்பினும் போதிய அளவு துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள்
நிறைந்துள்ளது.
மேலும், வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதியர் தேடி சாப்பிடும் பழமாக துரியன் உள்ளது. குழந்தை பிறப்புக்கு இந்த பழம் காரணமாக உள்ளது என கருதப்படுவதால், சீசன் காலங்களில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளது. கிராக்கிக்கு ஏற்றாற்போல் இதன் விலையும் சீசன் காலங்களில் அதிகம்.

Saturday, July 18, 2015

வெங்காயத்தின் ஆரோக்கிய மகிமை

Posted By Muthukumar,On July 18,2015

ONION SKIN
வெங்காயத்தை எகிப்தியர்கள் கி.மு. 3500-க்கு முன்பே உண்டு வந்தனர். அவர்களுக்கு பூஜைப் பொருளாகக்கூட இருந்தது.
* ஆதி காலத்தில் வாடகை கொடுக்கவும், திருமணப் பரிசாகவும் பயன்பட்டது. 1919ல் ‘ஃப்ளூ’ என்ற கொடிய நோய் உலகில் சுமார் 40 கோடி பெரைக் கொன்றபோது , ஐரோப்பா கண்டத்தில் ஒரு டாக்டர் வைத்தியம் பார்த்தபோது, ஒரு வீட்டில் மட்டும் யாருக்கும் அந்நோய் இல்லாததைக் கண்டு , வியந்து,” நீங்கள் என்ன பாதுகாப்பு செய்துள்ளீர்கள்?’ என்று கேட்டார்.
* அப்போது அவரின் மனைவி உரிக்காடஹ் வெங்காயத்தை தட்டில் ஒவ்வொரு அறையிலும் வைத்திருந்தடஹிக் காட்டினாள். ஆராய்ச்சிக் கூடத்தில் சோதித்தபோது அவற்றில் ஃப்ளு நோயின் வைரஸ் இருந்ததைக் கண்டு வியந்தார்.
*வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் மாபெரும் கிருமிநாசினிகள். கிருமிகளை அழிக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. கிருமிகளை அழிக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. காயங்கள் செப்டிக் ஆகிவிடாமல் காக்கும். ஆனால் வெட்டி வைகக்ப்பட்ட வெங்காயம் கிருமிகளை கவரும்.
* தினமும் வெங்காயம் சாப்பிடுவோருக்கு கான்சர் வருவது கடினம்.
* உடலில் எதிர்ப்பு சக்தி தருகிறது.
* நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதய நோயைக் குணப்படுத்தும்.
* பூச்சி வண்டு கடிக்கு வெங்காய சாறை தடவலாம்.
* சாதாரண சளி, , காய்ச்சல், ஒவ்வாமைக்கு(அலர்ஜி) தேனுடன் கலந்த வெங்காயச் சாறு அருமருந்து.
* நல்ல தூகக்ம் தரவல்லது.
* எலும்புகளை உறுதியாக்கும்.
* விளக்கெண்ணெயில் வேகவைத்து மசித்து தடவினால், வலி குறையும்.
* நரம்பு மண்டலம் வலிமை பெறவும, ஞாபக சக்தி பெருகவும் உதவும்.

Thursday, June 18, 2015

ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை



சர்ச்சை
ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்க ளில் தரிசனம் தருகிற லாட் ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்குமேல் பாடம் நடத் துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை . ஆனால், அதைப்
பற்றிய அவசரமுடிவு ஒன்று எடுக்க வேண்டிய அவசியத்தை மதுரை உயர் நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது.
‘ஆண்மைக்குறைவு, இல்லற உறவில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் கார ணமாக இருதரப்பினரும் பாதிக்க ப்படுகின்றனர். இது இப்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்குத்தீர்வுகாண, ‘திருமணத்துக்குமுன் ஆண், பெண் இருவருக்கு ம் மருத்துவப் பரிசோதனை கட்டாயம்’ என்று ஏன் சட்ட ம் கொண்டு வரக் கூடாது என்பதற்கு, மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும்’ என்று விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி பதி என்.கிருபாகரன் இடைக்கால உத்தரவு பிறப்பித்தி ருக்கிறார். பல தரப்பிலும் விவாதங்களை உருவாக்கி இருக்கும் இந்தப் பிரச்னை பற்றி சிறுநீரகம் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவரான ஏ.ராஜசேகரனி டம் தினமலர் எடுத்த பேட்டி இது
ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?
 ‘‘தாம்பத்தியத்தில் ஆண், கொடு ப்பவனாகவும் (Active partner), பெண், பெறுபவளாகவும் Passive partner)  இருக்கிறாள். ஒரு உற வின்தன்மை, நேரம் எல்லாவற் றையும் தீர்மானிப்பது ஆண்தான் … பெண்ணின் பங்களிப்பு இதில் குறைவு.  நீதிமன்றம் குறிப்பிட்டிருக் கும் இல்லற உறவில் விருப்பமில்லாத பெண்களின் குறையைக் கூட (Frigidity) எளிதில் சரிசெய்து விட முடியும். பெண்களின் மற்ற பாலியல் குறைபாடுகளும் சரிசெய்யக் கூடிய வையே.
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், 2008ம் ஆண்டு 88 விவாகர த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன் எண்ணிக்கை 2013ல், 715 ஆக உயர்ந் துள்ளது. இந்த 715 வழக்குகளில் பெண்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு காரணமாக விவா கரத்து கேட்டிருக்கும் வழக்குகள் ஐந்தோ ஆறோதான். ஆண்களை குற்றம் சாட்ட வேண்டும் என்பதோ, ஆண்களின் குறை பாடுகள் சரி செய்ய முடியாதவை என்று பயமுறுத்து வதற்காகவோ இதைச் சொல்லவில்லை. தாம்பத்தியத்தில் பெரும்பொறுப்பு வகிக்கிற ஓர் ஆண், தன்னைப் பரி சோதித்துக் கொண்டு குறைகள் இருந்தால் சரி செய்து கொள்ள முன்வர வேண்டும் என்பது தான் இதில் முக்கியம்…’’
ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபி த்துவிட முடியுமா?
‘‘மருத்துவரீதியாக ஓர் ஆண், தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியா து. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடை முறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல் லை. சிலர் தன்பாலின விருப்பம் கொண்ட ஹோமோ செக்ஷு வலாகஇருப்பார்கள். சிலர் போ தைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள்… சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபடமுடியாது. மற்ற பெண்களிடம் நார்மலாக இருப் பார்கள் (Selective impotence). இதுபோன்ற நபர்களைப் பரி சோதித்தால் ஆரோக்கிய மாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும்.பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமு றையில் சரியாகச்செயல்படுபவராகவும் இருக்கலா ம்.
பாலியல்உறவில் மனம் பெரும்பங்கு வகிப்பதுதான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இப்பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற் றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடி யும்…’’
 
ஆண்மலட்டுத்தன்மைக்கும் ஆண்மை யின்மைக்கும் என்ன வித்தியாசம்?
‘‘ஆண்மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடைய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத் தன்மை இ ருக்கலாம். ஒருபெண்ணுடன் உறவு கொள்ளமுடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொ ண்டிருக்கலாம். இதில் இன்னொரு விஷயம். ஆண்மையின்மை கார ணமாக விவாகரத்து கேட்கமுடியும். மலட்டுத்தன்மையைக் காரண ம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது…’’

திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை சாத்தியம் தானா?
பிறப்பு இறப்புச்சான்றிதழ்கள் சட்டமாக்கப்பட்டுள்ளன. திருமணப் பதிவும் சட்டமாக்கப்பட்டு நடை முறையில் உள்ளது. அதே போல, திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையும்சட்டம் ஆக்கப்பட்டால்தான் இந்தப் பிரச்ச னைக்குத் தீர்வு கிடைக்கும். அதை த்தான் நீதியரசர் கிருபாகரன் கூறி யிருக்கிறார். பெண் வீட்டார் மாப்பி ள்ளை வீட்டாரிடம் ‘உங்கள் மகன் ஆண்மகன்தானா?’ என்று கேட்க முடியாது. ஏன், மாப்பிள்ளை யின் வீட்டாருக்கே கூட தெரியாது. சில வீடுகளில், மாப்பிள்ளையின் குறை யை மறைத்துத் திருமணம் செய்து வைப்பதும் உண்டு. அதனால், பரி சோதனை சட்டமாக்கப்பட்டால் இந் த வழக்குகளின் விகிதங்கள் பெருமளவும் குறைய வாய்ப்பிருக்கி றது…’’

தம்பதி என்ன செய்ய வேண்டும்?
‘‘துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத் து வரவேண்டும். நான்கு சுவர்களு க்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. தம்பதிக் குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்க ளாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங் களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்…’’
ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

‘‘இன்று மருத்துவம் பலவிதத்திலும் முன்னேறி இருக்கும் நிலையில் ஆண்மைக்குறைவுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்து விடுகி றது. இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அதனால், 90% பேர் கவுன்சலி ங் கொடுத்தாலே குணமாகி விடுவார்கள். 5% பேருக்கு மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் தேவைப்படும். மீதி 5% பேர் மட்டுமே கொஞ்சம் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய வர்கள். அத ற்கு, பிரச்னை என்னவென்று முதலில் மருத்துவ ருக்கு தெரியவேண்டும். பிரச்சனையை மனதுக்கு ள்ளேயே வைத்துக்கொண்டு மறைக்க முயற்சிப்ப து, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்க ளோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவு க்கு வெளியே இன்னொருவருடன் தொ டர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல் கள் அல்ல…’’
பாலியல் கல்வி ஏன் அவசியம்?

‘‘பாலியல் கல்வி என்றவுடனே பதறிப் போய் அதெல்லாம் தப்பு என்று சொல் கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பாலியல்கல்வியில் கிளர்ச்சியூட்டுகி ற படங்களை காட்டப்போவதில்லை … கதைகள் சொல்லப் போவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களது உடல்பற்றிய அறிவுகொஞ்சமாவது இருக்கவேண்டும். விளையாட் டுப் பிள்ளைகளாக இருந்து திடீரெ ன வாலிப வயதுக்குள் நுழையும் ஓர் ஆணும் பெண்ணும் திடீரென உடல் மாற்றங்களால் குழப்பமடை கிறார்கள். இதைப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு…’’
இப்போது நடக்கிற சம்பவங்கள் திருமணமாகாதவர்களை குழப்பாதா?
‘திருமணத்துக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரையோ, பாலியல் சிகிச்சை மருத்துவரையோ சந்தித்து தனக்கிருக் கும் சந்தேகங்க ளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்ச னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம்காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். ரகசியமாக இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று தேடி போலி மருத்துவர்களிடம் மாட்டிக் கொண்டு பணத்தை யும் ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள். அதை யெல்லாம் தவிர்க்க இந்த வழக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்பு கிறேன்!’’
தயக்கம் என்ன?
குழந்தையின்மைக்கான பரிசோதனைக்கு முன் வருவதில் ஆண்களுக்கு இருக்கும் அதே தயக்கம், இந்த விஷயத்திலும் இருப்பதாக ச் சொல்கிறார் உளவியல் ஆலோ சகர் வசந்தி பாபு. மாற்றம் தேவை ப்படுகிற விஷயங்கள் குறித்தும் பேசுகிறார் அவர்.‘ ‘பிரச்சனைனு சொல்லிக்கிட்டு கணவன்-மனைவி ரெண்டுபேரும் வருவாங்க. தன க்குத்தான் பிரச்னைங்கிற மாதிரியே இருக்கும் மனைவியோட அணுகுமுறை. பேசிப்பார்த்தா, கணவருக்குத்தான் பிரச்னைங்கிறது தெரிய வரும். குழந்தையில்லைங்கிற நிலை மையில ஒரு பெண் தன்கிட்ட பிரச்சனை இரு க்கலாம்னு சந்தேகப்பட்டு பரிசோதனைகளு க்குத் தயாராகிற மாதிரி, ஆண்மைக் குறை பாடுகள் விஷயத்துல ஒரு ஆணால தைரியமா முன் வர முடியறதில்லை.
ஆண்மைக்குறைபாடுங்கிறதை ரெண்டு வித மாபார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணுக்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோச மான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்னைகள், அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாமப் போகறது ஒரு வகை.  உண்மையிலேயே உடம்புல பிரச்னைகள் இருந்து, அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறை பாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலாம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பை யில கோளாறு’னு ஒரு பெண் தய ங் காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்னைகளை வெளி யில சொல்லத் தயாராகணும். கவுன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்னைகளும் தீர்க் கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக்கம். ஆலோசனைக்கு வந்தாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான்…’’  

Tuesday, June 9, 2015

குண்டாக விரும்புவோர்


குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்
குண்டான உடலைக் குறைப்பது தான் இப்போது பல
பெண்களுக்கும் பெரும் பிரச்சனை யே. ஆனால் இளைத்த‍ உடல் வாகு உள்ள‍வர்கள் குண்டாக விரும்பினா ல், அது உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச்சின்ன லட்டுகளாக ப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒருசிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் 3 வேளைகள் சாப்பிடவும். ச்யவனபிராஷ்லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிட வும். 

தினம் சிறிதுதேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள் ளவும். தினம் இரு வேளை 5 பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவு கள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பி டவும்.
காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியி ல் கைப் பிடியளவு கொண்டைக் கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றை யெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!


இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு. எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அது எல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத் தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும் என்கிறார் தேனி, காமயகவுண்டன்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கே.சிராஜுதீன். 
  சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும். அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
  குடல்புண் மற்றும் உணவுக்குழாயில்் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள்வைக்க உதவும். கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.
  இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.
 பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்ததுள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (angular cheilitis) குணமாகும்.  சர்க்கரை நோய் கட்டுப்படு்ம். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
  கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.
  கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும்  உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின்சி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது. 
  கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.  இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும்.  சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் (primary complex) காசநோயினைக் கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மருத்துவர் சிராஜுதீன் பகிர்ந்துகொண்ட உணவுமுறையை டாக்டர் விகடன் வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் சுப்ரமணியன்.
கேழ்வரகுக் கூழ்
தேவையானவை: கேழ்வரகு   200 கிராம், தண்ணீர்  4 டம்ளர், மோர் (அ) காய்ச்சிய பால்  3 டம்ளர், சின்ன வெங்காயம்  6, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  தேவையான அளவு, பச்சை மிளகாய்  3, கடுகு  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை நீரில் நன்றாக ஊறவைத்து, மெல்லியத் துணியில் கட்டி, முளைக் கட்டவும். முளை விட்டதும், கடாயில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும். இதில், கெட்டியாக இருக்கும் அளவுக்கு நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறத்தில் வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கடைசியில் மோர் (அ) பால் சேர்த்து இறக்கவும். 
கேழ்வரகு பாதாம் கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு  200 கிராம், பாதாம் பருப்பு  50 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர்  3 டம்ளர், சின்ன வெங்காயம்  6, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  தேவையான அளவு, பச்சை மிளகாய்  3, கடுகு  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும். இதைக் கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும். பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். இதை நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். மோர் சேர்த்து இறக்கவும். 
சிறுதானியக் கஞ்சி
தேவையானவை: சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு  தலா 50 கிராம், மோர் (அ) காய்ச்சிய பால்  3 டம்ளர், தண்ணீர்  4 டம்ளர், சின்ன வெங்காயம்  6 முதல் 8, சீரகம்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  தேவையான அளவு, பச்சைமிளகாய்  3, கடுகு  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு தேவையான அளவு.
செய்முறை: சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுக்க வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப் பொடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும். 
கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். பிறகு மோர் (அ) பால் சேர்க்கவும். இதேபோல், சிறுதானியங்களைத் தனித்தனியாக கஞ்சி தயாரித்துப் பருகலாம்.
நன்றி-டாக்டர் விகடன்

Sunday, May 31, 2015

எலும்பு மஜ்ஜைகள் (Bone Marrow) பலமடைந்து இரத்தம் விருத்தியாக



ந‌மது உடலில் உள்ள‍ எலும்பு மஜ்ஜைகளிலிருந்து
இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த(உலர்ந் த)திராட்சை (KISMIS FRUIT) மிகவும் உதவுகிறது. இப்பழத்தை எடுத்து வாயில்போட்டு கொஞ்சம் கொஞ்சமா க சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜை கள் பலமடைந்து இரத்தம்அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்ப டுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

தைராய்டு

Posted By Muthukumar,On May 31,2015
THYROID
1.தைராய்டு என்பது என்ன?:
நமது உடம்பில் பலவிதமான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன.அவை ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்தி , அந்த செலகளை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான், தொண்டையில் இருக்கும் ‘தைராய்டு ‘ சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன.இது சுரக்கும் ஹார்மோனின் பெயர் ‘ தைராக்ஸின்’.
2. தைராய்டு சுரப்பியின் பயன் என்ன?:
இதயத்தை சீராக வைக்க உதவுகிறது. இனப் பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகின்றது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், ‘தைராக்ஸின்’ ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
3.தைராய்டு குறைபாடு எத்தனை வகை?:
தைராய்டு குறைபாட்டில் இருவகை உள்ளது. ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது.மற்றொன்று -தைராய்டு குறைவாக சுரப்பது.
4.தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?:
முடி உதிர்தல், மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதைவிட வித்தியாசமாக இருக்கும்.மாதவிடாயில் பிரச்சினை, கழுத்து வீக்கம், மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மனக் கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படும்.
5. தைராய்டின் பாதிப்புகள் என்ன?:
அதிகமாக தைராக்ஸின் சுரந்தால் எடை குறையும். இதயத் துடிப்பு அதிகமாகும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள்,குழந்தையின்மை, வயிற்றுப் போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். தைராக்ஸின் குறைவாக சுரந்தால், மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவது, அதிகமான முடி உதிர்வது, மலச் சிக்கல், உடல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
6. தைராய்ட் பிரச்சினை உள்ளோர், தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?:
தைராய்டு குறைவாக சுரக்கும் பிரச்சினை இருந்தால், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காளி ஃப்ளவர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது.
7. தைராய்டு காரணத்தால்தான் கழுத்துப் பகுதி வீக்கமடைகிறதா?:
தைராய்டு சுரப்பியின் செயல்பாடு, முறையாக இல்லாதபோது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும்.சில நேரங்களில் அயோடின் குறைபாட்டாலும் கழுத்து வீக்கம் ஏற்படலாம்.
8. தைராய்டு பிரச்சினை இருந்தால், மூட்டுகள் வலிக்குமா?:
மூட்டு வலி மற்றும், கடுமையான உடல்வலி போன்றவை தைராய்டு பிரச்சினைக்கான அறிகுறிகள்தான். அதோடு, தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடு, உடலில் ஆங்காங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.
9. தைராய்டு சுரப்பியில் கட்டிகள் வருமா?:
ஆம்!. தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு. அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம்.இது மட்டுமில்லாமல், தைராய்டு சுரப்பியில் நேரடியாகக்கூட புற்றுநோய்க் கட்டிகள் வரும்.
10. தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியுமா?:
பொதுவாக, மக்களுக்கு வரக்கூடிய குறைபாடு, தைராக்ஸின் குறைவாக சுரப்பது. இக்குறைபாடு ஒருமுறை வந்துவிட்டால், தைராக்ஸின் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிடவேண்டும்.ஆனால், தைராக்ஸின் அதிகமாக சுரந்தால், மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் முற்றிலுமாகக் குணப்படுத்தலாம்.

கேழ்வரகு


undefined
கேழ்வரகு தொன்றுதொட்டே நமது நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. நமது முன்னோர்கள் உடலுறுதியுடன், அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம், அவர்களது உணவு பழக்கம் தான். அந்த வகையில், அவர்களது உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு. களி, அடை மற்றும் கூழ் என, இன்றும் நமது கிராமங்களில் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது கேழ்வரகு.
சிறிய தானியமானாலும், இதில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவில், அதிகமாக உட்கொள்ளப்படும் தானியங்களில் கோதுமை, அரிசி தான். கோதுமை மற்றும் அரிசியுடன் ஒப்பிடுகையில், கேழ்வரகில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில், அத்தியாவசிய தாதுக்கள் காணப்படுகின்றன. கேழ்வரகில், அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது.
இதுவே, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு. ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை, குறைக்க வல்லது எனவும், அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதோடு இதில் உள்ள, டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம், உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்து செயலாற்றுகிறது. மேலும் இதில் காணப்படும், அதிகப்படியான நார்ச்சத்து, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இது வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் உகந்த உணவாகும்.
சைவ உணவுகளில், கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு, மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை, விரைவில் குணமாக்க வல்லது இந்த கேழ்வரகு. கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெதியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், உள்ளன. இவை நுரையீரலில் ஏற்படும், அதிகப்படியான கொழுப்பை குறைக்கின்றன. மேலும் இதிலுள்ள தெரோனைன் கொழுப்பு ஏற்படுவதை தவிற்கிறது.
கேழ்வரகில் எந்த சைவ உணவிலும் இல்லாத அளவில் இரும்புச்சத்து காணப்படுகிறது. இரத்த சோகை போக்க இது மிகவும் ஏற்றது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உடல் உறுஞ்சுவதற்கு உதவுகிறது. கேழ்வரகின் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு பண்பு, பொதுவாகவே உடலை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால், டென்ஷன், மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி, இன்சோம்னியா போன்றவற்றை தவிர்க்க இது உதவுகிறது. கேழ்வரகில் மனித உடலிற்கு நன்மை செய்யும், பல அமினோ அமிலங்கள் உள்ளன.
இதிலுள்ள ஐசோலியூசின் உடலில் சிதைவடைந்த திசுக்களை குணப்படுத்தவும், ரத்தம் உருவாகவும், எலும்புகள் உருவாகவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மெதியோனைன் வேறு எந்த தானியத்திலும் காணப்படாத ஒரு இன்றியமையாத அமினோ அமிலமாகும். இது கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், சல்பர் சத்தை கொடுக்கவும் வல்லது. இவ்வாறாக பல நோய்களை குணப்படுத்தும், ஈடுஇணையற்ற கேழ்வரகு நமக்கு எளிதில் கிடைக்கிறது.

Thursday, April 30, 2015

மருதாணி மகத்துவம்!


ருதாணி இலைகளைப் பறித்து, வீடே மணக்கும் அளவுக்கு அம்மியில் அரைத்து, இரவு சாப்பிட்டு முடித்தவுடன் கை, கால் விரல்களுக்குத் தொப்பி போட்டு, தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாக சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்ந்த காலம், இன்றைய  குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை.
கைகள் நொடியில் சிவக்க, மெஹந்தி கோனும், நெடுநாள் நீடிக்க டாட்டூவும்தான் அழகு, ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இவை, இருக்கும் அழகையும் கெடுத்து, சரும நோய்க்கும் வித்திடும். ஆனால், இயற்கையின் கொடையான மருதாணியைப் பயன்படுத்திவந்தால், அழகும் ஆரோக்கியமும் நிரந்தரம்.
மருத்துவப் பலன்கள்:
 மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம்.
 மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை,கால் எரிச்சல் குணமடையும்.
 நகப்புண், நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும்.
 மருதாணியைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டவேண்டும். இதை, ‘இலை ஊறல் குடிநீர்’ என்பர். இந்த நீரைத் தொடர்ந்து 20 நாட்கள் குடித்துவந்தால், மேகச்சொறி, படை நீங்கும். பேதி, சீதபேதி கட்டுப்படும்.
 மிகச்சிறந்த கிருமிநாசினி. காயம்பட்ட இடத்தில், ‘இலை ஊறல் நீரை’ விட்டு, ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாது. விரைவில் குணமாகும்.
 10 மி.லி மருதாணி இலைச்சாற்றுடன், பால் கலந்து குடித்துவந்தால், கை, கால் வலி நீங்கும்.
 மருதாணி விதையைத் தணலில் போட்டு, உடலில் புகை படும்படி இருந்தால், வெண்புள்ளிகள் மறையும்.
 மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால்,  விந்து எண்ணிக்கை பெருகும்.
 மருதாணி மிகவும் குளிர்ச்சியானது என்பதால், உடல்சூட்டைத் தணிக்கிறது. மருதாணியை உட்கொள்ளும்போது, சிலருக்கு அந்தக் குளிர்ச்சி, உடலுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.