Labels

Tuesday, June 9, 2015

குண்டாக விரும்புவோர்


குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்
குண்டான உடலைக் குறைப்பது தான் இப்போது பல
பெண்களுக்கும் பெரும் பிரச்சனை யே. ஆனால் இளைத்த‍ உடல் வாகு உள்ள‍வர்கள் குண்டாக விரும்பினா ல், அது உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச்சின்ன லட்டுகளாக ப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒருசிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் 3 வேளைகள் சாப்பிடவும். ச்யவனபிராஷ்லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிட வும். 

தினம் சிறிதுதேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள் ளவும். தினம் இரு வேளை 5 பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவு கள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பி டவும்.
காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியி ல் கைப் பிடியளவு கொண்டைக் கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றை யெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

No comments:

Post a Comment