Labels

Friday, January 30, 2015

நரம்புத் தளர்ச்சியை நீக்கும் சௌ-சௌ

Posted by Muthukumar,on Jan 30,2015
CHOW CHOW
நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌ-சௌவும் ஒன்று. சௌ-சௌவில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌ-சௌவில் 17.8% கார்போஹைடெரேட், 10.7% ஸ்டார்ச் 10.5% போலேட் சத்து, 5.4% புரதச் சத்து, 6.7%சுண்ணாம்புச் சத்து, 4.5% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌ சௌவை சாப்பிடலாம். இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கி நரம்புகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச் சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்த காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.பெருங்குடல் சிறுகுடல் சம்பந்தமான பிரச்சினைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சினைகளை சரிப்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை கால்களில் வீக்கம் ஏர்படும். அதனால் நீர்ச் சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. சிறு வயதிலேயே முகச் சுருக்கம் ஏறப்ட்டுவிட்டதே என கவலைப்படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள சுருகக்ம் நீங்கிவிடும்.
சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய்த் தடுப்பியாக செயல்படுகிறது. எனவே இதைஉணவில் பயன்படுத்தினால், புற்றுநோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளமுடியும். தைராய்டு கோளாறால், அவதிப்படுபவர்கள் சௌசௌவைப் பயன்படுத்தலாம்.
சௌசௌவில் காணப்படும் காப்பர், மங்கனீசு, தைராய்டு நோயால் அவதிப்படுபவர்கள் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால், தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் காணப்படுவதால், எலும்புகள் வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.
கொழுப்புகளைக் குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை மாலை வேளைகளில் உணவிற்கு முன் இதைப் பருகலாம்.

Sunday, January 18, 2015

கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய தெரியாத சங்கதிகளும் சுவாரஸ்யத் தகவல்களும்!



பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். மேலும் ஒவ்வொரு
கர்ப்பிணிகளுக்கும் அது வேறுபடும். அதில் ஒரு சிலரு க்கு இனிப்பான உணவுகளும், சிலருக்கு உப்பு அதிகம் இருக்கும் உணவுகளும் மற்றும் சிலருக்கு புளிப்புமிக்க உணவுகளும் சாப்பிட விருப்பமாக இருக்கும். ஆனால் இப்படி கர்ப்பி ணிகளுக்கு சாப்பிட தோன்றும் உணவுகளைக் கொண்டும் என்ன குழந்தை வயிற்றில் வளர்கிறது என்பதைகணிக்க முடியும் என்பது தெரியுமா?
ஆம், நம் நாட்டில் வயிற்றில் வளர்வது ஆண்குழந்தையா, பெண் குழந்தையா என்று பரிசோதித்துபப் பார்ப்பது பெ ருங்குற்றம். ஏனெனில் சிலர் பெண் குழந்தை வயிற்றில் இருந்தால், கருச்சிதைவு செய்துவிடுகின்றனர். என வே இந்திய அரசாங்கமானது இதனை தடை செய்து விட்டது. ஆனால் நம் முன் னோர்கள் அக்காலத்தில் கர்ப்பிணிகளின் ஒருசில செயல்களை வைத்து, வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தக வல்கள்!!!
அதில் ஒன்று தான் அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்கள். இவற்றிற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் பலருக்கு இந்த வகையான கணிப்பு சரியானதாக உள்ளது. இங்கு வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும் உணவுகள் பட்டியலி டப்பட்டுள்ளன.
புளிப்பு: 

புளிப்பாகஇருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், வயிற்றில் ஆண் குழந்தை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
உப்பு:
கர்ப்பிணிகளுக்கு இனிப் பான உணவுகளைப் பார்த்து அதிகஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்பு மிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் ஒருசில நம்பிக்கை உள் ளது.
காரம்:
இதுவரை காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தவர்கள், திடீரென்று கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை அதிகம் உட் கொள்ள ஆசைப்பட்டால், அதுவும் ஆண் குழந்தை உள்ளது என்ப தை சுட்டிக் காட்டும். வேண்டுமானால் ஆண் குழந்தை பெற்ற தாய்மார்களை கேட்டுப் பாருங்கள்.

எலுமிச்சை:
எலுமிச்சையைப் பார்த்த தும் அதை உடனே ருசித் தாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறதா? அப்படியென்றால் உங்கள் வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அனுபவமிக்க தாய்மார்களிடம் கேட்டால், இதை சொல்வார்கள்.
இறைச்சி :
கர்ப்ப காலத்தில் அசைவ உணவு களின்மீது நாட்டம் அதிகம் இருந் தால், அதுவும் ஆண் குழந்தை வயிற்றில் வளர்ந்து வருகிறது என்று கருதப்படுகிறது.
ஊறுகாய் :
சில ஆண் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பி ணிகளுக்கு ஊறுகாய் பார்த் தாலே அதை அள்ளி சாப்பிட வேண்டுமென்றுதோன்றும். ஏனெனில் அதில்உப்பு, காரம், புளிப்பு போன்றவை அதி கம் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு :
நிறைய கர்ப்பிணிகளுக்கு ஆரஞ்சு பழத்தின் மீது விருப்பம் அதிகம் இருக்கும். இதற்கு எவ்வித ஆதாரமு ம் இல்லாவிட்டாலும், பல பெண்கள் இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதா க சொல்கின்றனர். இவையே வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப் பிடத் தோன்றும் உணவுகள். நீங்கள் வேறு ஏதாவது அனுபவத்தைப் பெற்றிருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தாய்ப் பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடுமா?

Posted on  by Muthukumar


பாலூட்டினால் பெண்களின் மார்பகழகு கெட்டு விடும் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. சொல்லப் போனால்
குழந்தைக்கு தாய் பாலூட்டுவதால் அவள் உடல் பெரிதும் நலமடைகிறது. இதுதவிர பிரசவம் ஏற்பட்டால் கர்ப்பபை சுருங்கி விடுகிறது அல்லவா? பெரும்பாலும் அது நியதியான முறையில் சுருங்குவதில்லை. அப்படி சுருங்கிப் பழைய நிலையை அடைய பால் சேகரிப்பு பைகள் வேலைகள் செய்ய வேண்டும்.
தங்கள் மார்பழகு குன்றிவிடுமோ, உடல் வனப்பு மங்கி விடுமோ என்று தவறாக கருதி, ஊறிவரும் அமுதத்தைத் தனக்குள் அமுக்கிவைத்தால் விளைவது நன்மை அல்ல, தீமைதான்.

Wednesday, January 7, 2015

ஆண்க‌ளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிர்ச்சித் தகவல்


undefined
ஆண்க‌ளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதிர்ச்சித் தகவல்
இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத் திற்கும் குறைவாக
தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வுஒன்றில் தெரி ய வந்துள்ளது. அதுவும் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இப்பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.
ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோ ன் குறிப்பிட்டஅளவு இருந்தால் தான் பாலியல் உணர்வு தூண் டப்படும். அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார் மோன் அளவை டெஸ்ட்டாஸ் ட்டுரோன் என்ற அழைக்கிறார்கள். இந்த டெஸ்டோஸ் டெரோன்அளவுக்கும், சக்திகுறைவு, விறைப்பு தன்மைகுறைதல், கவனக்குறைவு மற் றும் சோர்வடைதல் ஆகியவ ற்றுக்கு மிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த டெஸ்ட்டாஸ்ட்டுரோன் முக் கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்ற ஈவ்வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஈவ்வான் உள்ளிட்ட சிகாகோ பல்கலை க் கழகம்சார்பில் மேற்கொண் ட ஆய்வில்தான் இந்த விவர ம் தெரியவந்துள்ளது. அந்த பல் கலைக்கழக வளாகத்தில் இருந்த 10 பேர் இந்த ஆய்வுக் கு உட்படுத்தப்பட்டனர். சராசரியாக 24 வயது கொண்ட இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோ தனைகளும், உளவியல் பரிசோதனை களுக்கு ம் உட்படுத்தப்பட்டனர்.
அதன்பிறகு இவர்கள் மூன்று நாட்களு க்கு இரவில் 10மணிநேரம்வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்க ப்பட்டனர். ஆய்வின் ஒவ்வொரு நாளின் போதும்,24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களு க்கும் அவர்களது ரத்தமா திரி சோதனைக்கு உட்படு த்தபட்டது. இதில் குறை வாக தூங்கி யதற்கு பிற்கு இவர்களது டெஸ்ட் டாஸ்ட்டுரோன் அளவு குறைந்தி ருப்பது ஆய்வில் தெரியவந்ததாகசொல்லும் ஈவாவான், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அள வுகுறைத லுக்கும் தொடர்பு இருப்பதால், தூக்கமின் மை நிச்சயம்பாலியல் உணர்வை பாதிக்கும் என்று அடித்துக் கூறுகிறார்.

பெண்களைத் தாக்கும் முகவாதம்

 By Muthukumar,On Jan 7,2015

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்…’ என்ற திருப்பாவைப் பாடல் ஒலிக்க, மார்கழி அதிகாலைப் பொழுதில் குளிர்ந்த நீரில் பெண்கள் குளிப்பது வழக்கம். தமிழகம் எங்கும் பனி விழும் காலமாக மாறும் இந்த மாதத்தில், பெண்கள் வாசலில் கோலமிட்டு, பஜனை பாடிச் செல்வதையும் பார்க்கலாம்.
கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கூடுதல் குளிர்ச்சியும், பனியும் நிலவும் நேரத்தில் பல நூறு ஆண்டுகளாகப் பெண்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் குளிர் தாங்க முடியாமல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதும் உண்டு.
குளிர் தாக்கினால்
பனி மற்றும் குளிர் காலத்தில் 18 வயது முதல் முதியவர்கள் வரையிலானவர்களை முகவாத நோய் (Bell’s palsy) தாக்க வாய்ப்பு உண்டு. உட்புறக் காது வழியாக மூளைக்குச் செல்லும் ஏழாவது நரம்பு, பனிக் காற்றால் தாக்கப்படும்போது, முகவாதம் ஏற்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் முகம் கோணலாகி, உதடுகள் கோணி, நாக்கு உணர்விழந்து, கண் இமை மூட மறுத்து, உமிழ் நீர் முழுங்க முடியாமல் போகும்.
“அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பதும், பனிக் காற்றில் வீடு மெழுகி, வாசலில் கோலமிட்டு, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பலர் முகவாத நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்” என்கிறார் சேலம் பாரத் பிசியோதெரபி மருத்துவர் எம்.செந்தில்குமார்.
முன்னெச்சரிக்கைகள்
இந்தப் பாதிப்பில் இருந்து விடுபடச் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஸ்வெட்டர் அணிந்துகொள்ள வேண்டும். காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். கை, கால் உறைகளைப் பயன்படுத்தலாம். மின் விசிறி காற்று காதில் நுழையாதபடி ஒருபுறமாகப் போர்த்திப் படுக்கலாம்.
“முகவாதம் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஒரு மாதம்வரை நோய் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது. நோய் தாக்கிய உடனே, மூளை நரம்பு மருத்துவ நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பின், பிசியோதெரபி சிகிச்சை மூலம் முகவாத நோயைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தலாம். மின்காந்தத் தூண்டல் சிகிச்சை மூலம் செயல் இழந்த நரம்பு மண்டலத்தைத் தூண்ட முடியும்.
எளிய பயிற்சிகள்
கண்களை இறுக்க மூடி திறந்து பயிற்சி எடுக்க வேண்டும். வாயில் பலூனை வைத்து ஊதி ஊதிப் பயிற்சி செய்ய வேண்டும். ஆங்கில உயிர் எழுத்துகளான ஏ, இ, ஐ, ஓ, யூ ஆகியவற்றை உரிய உச்சரிப்பில் சத்தமாக வாய்விட்டுக் கூற வேண்டும். இவ்வாறு தொடர் பயிற்சி மூலம் முகவாத நோய்க்கு ‘குட்-பை’ சொல்லலாம்” என்கிறார் செந்தில்குமார்.
முகவாதம் பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் தாக்கக்கூடியது என்பதால், இருபாலரும் குளிர், பனிக்காலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.