Labels

Thursday, April 30, 2015

மருதாணி மகத்துவம்!


ருதாணி இலைகளைப் பறித்து, வீடே மணக்கும் அளவுக்கு அம்மியில் அரைத்து, இரவு சாப்பிட்டு முடித்தவுடன் கை, கால் விரல்களுக்குத் தொப்பி போட்டு, தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாக சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்ந்த காலம், இன்றைய  குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை.
கைகள் நொடியில் சிவக்க, மெஹந்தி கோனும், நெடுநாள் நீடிக்க டாட்டூவும்தான் அழகு, ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இவை, இருக்கும் அழகையும் கெடுத்து, சரும நோய்க்கும் வித்திடும். ஆனால், இயற்கையின் கொடையான மருதாணியைப் பயன்படுத்திவந்தால், அழகும் ஆரோக்கியமும் நிரந்தரம்.
மருத்துவப் பலன்கள்:
 மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம்.
 மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை,கால் எரிச்சல் குணமடையும்.
 நகப்புண், நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும்.
 மருதாணியைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்டவேண்டும். இதை, ‘இலை ஊறல் குடிநீர்’ என்பர். இந்த நீரைத் தொடர்ந்து 20 நாட்கள் குடித்துவந்தால், மேகச்சொறி, படை நீங்கும். பேதி, சீதபேதி கட்டுப்படும்.
 மிகச்சிறந்த கிருமிநாசினி. காயம்பட்ட இடத்தில், ‘இலை ஊறல் நீரை’ விட்டு, ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாது. விரைவில் குணமாகும்.
 10 மி.லி மருதாணி இலைச்சாற்றுடன், பால் கலந்து குடித்துவந்தால், கை, கால் வலி நீங்கும்.
 மருதாணி விதையைத் தணலில் போட்டு, உடலில் புகை படும்படி இருந்தால், வெண்புள்ளிகள் மறையும்.
 மருதாணி இலைச்சாறு, தண்ணீர், சர்க்கரையைக் கலந்து குடித்துவந்தால்,  விந்து எண்ணிக்கை பெருகும்.
 மருதாணி மிகவும் குளிர்ச்சியானது என்பதால், உடல்சூட்டைத் தணிக்கிறது. மருதாணியை உட்கொள்ளும்போது, சிலருக்கு அந்தக் குளிர்ச்சி, உடலுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பாதாம் பிசின் கலந்து பயன்படுத்தலாம்.

Friday, April 17, 2015

சிறுநீர் கழிப்பதில் சிக்கலா?


ஆண்களின் சிறுநீர்ப் பைக்குக் கீழே மற்றும் சிறுநீர் பாதையைச் சுற்றி இருக்கிறது, புராஸ்டேட். இதன் வழியேதான் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுகிறது. 50 வயதுக்குப்பின் பிராஸ்டேட் பிரச்னை என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது.
ஆண்களின் பாலியல் ஹார்மோன் செயல்பாடு காரணமாக புராஸ்டேட் விரிவடைகிறது. பெரும்பாலானவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனினும் சில நோயாளிகளுக்கு இதனால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பாதிப்பு ஏற்படுத்தாத புராஸ்டேட் வீக்கம் பாதிப்பு ஏற்படுத்தாத புராஸ்டேட் வீக்கம், பெரிய சுரப்பி சிறுநீர் குழாய் மேல் அழுத்தி, சிறுநீர் வெளியேறுவதைத் தடுக்கலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்த பின் திருப்தி இன்மை, ஒழுகுதல் மற்றும் இறுதியாக முழுவதுமாக சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். புராஸ்டேட் வீக்கம் என்பது, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம் என்பதற்கான முன் அறிகுறியாகும். புராஸ்டேட் பெருக்கத்தை டிஜிட்டல் முறையில், மலக்குடல் சிரை பரிசோதனை செய்து ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்துகொள்ளலாம்.
அல்ட்ராசவுண்ட் கிராபிக் மூலம், புராஸ்டேட் வீக்கத்தை உறுதி செய்யலாம். சிறுநீர் கழித்தபின்னர் சிறுநீர் பையில் இருந்து எவ்வளவு சிறுநீர் வெளியேறாமல் உள்ளது என்பதையும் அளவிடமுடியும். சிறிய புராஸ்டேட் வீக்கத்தை, சில மருந்துகளுடன் கூடிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். எனினும் மருந்து சிகிச்சையின் மூலம் இதைக் குணப்படுத்த முடியாது. பெரிய புராஸ்டேட் பெருக்க அறிகுறி, மருந்து சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. அறுவை சிகிச்சையின் மூலமே புராஸ்டேட் பெருக்கத்தை வெட்டிக் குறைக்க முடியும். புராஸ்டேட் வீக்கத்தை தற்போது சிறுநீர் வடிகுழாய் வழியே அகற்றமுடியும். அடிவயிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது.
புராஸ்டேட் புற்று நோய் 65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, புராஸ்டேட் புற்று நோய் ஏற்படுவது பொதுவானதாக இருக்கிறது. புற்று நோயால் ஏற்படும் வலுவின்மை அறிகுறிகளே, இதன் அறிகுறி. சிகிச்சையளிக்கப்படாத கேன்சர், உடலின் எல்லாப் பாகங்களிலும் பரவி வலியை, சுகமின்மையை அதிகரிக்கும். இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். மலக்குடல் சிரை சோதனை மூலம் முறையாக
பரிசோதித்து, புராஸ்டேட் புற்று நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம். அறிகுறிகள் தோன்றும் முன், இதைக் குணப்படுத்த முடியும்.
புராஸ்டேட் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை ஆகிய பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. நோயின் தன்மையைச் சார்ந்துதான், அறுவை சிகிச்சையின் முடிவு இருக்கிறது. மலக்குடல் சிரை உள்ளிட்ட முறையான மருத்துவப் பரிசோதனைகள், புராஸ்டேட் பிரச்னைக்கு எதிரான நல்ல பாதுகாப்பாகும். சிறுநீர் முந்துதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும். தீவிரமான அறிகுறி வரும் வரை காத்திருந்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கலாம்.

Monday, April 13, 2015

இந்த ப‌ழத்தை சாப்பிட்டு, பிறகு பாலை குடித்து வருபவர்களுக்கு


இயற்கை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் கொடைகளில் மிகவும் சிறந்த ஒன்று எது என்றால் அது இந்த பழம்தான் என்று சொல்ல‍லாம்.
அது எந்த பழம் என்றால், அதுதான்
கிஸ்மிஸ் என்றழைக்க‍ப்படும் உலர் திராட்சைப்பழங்களே என்றேசொ ல்ல‍லாம். அத்தகை சிறப்புமிக்க உலர்திராட்சையின் மருத்துவ குணங்களை சென்ற பதிவுகளில் பார்த்து வருகிறீர்கள். அந்தவரிசையில் இந்த கிஸ்மிஸ் என்ற ழைக்க‍ப்படும் உலர்திராட்சைக்கு இருக்கும் இன்னொ ரு மருத்துவ குணத்தை இங்கு பார்ப் போம்.
50 உலர் திராட்சைப் பழங்களை எடுத்து அதை நன்றாக சுத்தம்செய்து, பிறகு பசுப்பாலில் போட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து, பின் பாலோடு சேர்த்து குடிக்கும்போது தட்டுப்படும் உலர்திராட்சைப் பழத்தையும் சாப்பிட்டு விட்டு பாலையும் குடித்து வருபவர்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கல் குணமாகி, ஆரோக்கியமான உடலையும் உற்சாகமான உள்ள‍த்தையும் பெறுவர்.