Labels

Thursday, June 18, 2015

ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை



சர்ச்சை
ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்க ளில் தரிசனம் தருகிற லாட் ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்குமேல் பாடம் நடத் துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை . ஆனால், அதைப்
பற்றிய அவசரமுடிவு ஒன்று எடுக்க வேண்டிய அவசியத்தை மதுரை உயர் நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது.
‘ஆண்மைக்குறைவு, இல்லற உறவில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. இதன் கார ணமாக இருதரப்பினரும் பாதிக்க ப்படுகின்றனர். இது இப்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்குத்தீர்வுகாண, ‘திருமணத்துக்குமுன் ஆண், பெண் இருவருக்கு ம் மருத்துவப் பரிசோதனை கட்டாயம்’ என்று ஏன் சட்ட ம் கொண்டு வரக் கூடாது என்பதற்கு, மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும்’ என்று விவாகரத்து வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி பதி என்.கிருபாகரன் இடைக்கால உத்தரவு பிறப்பித்தி ருக்கிறார். பல தரப்பிலும் விவாதங்களை உருவாக்கி இருக்கும் இந்தப் பிரச்னை பற்றி சிறுநீரகம் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை மருத்துவரான ஏ.ராஜசேகரனி டம் தினமலர் எடுத்த பேட்டி இது
ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?
 ‘‘தாம்பத்தியத்தில் ஆண், கொடு ப்பவனாகவும் (Active partner), பெண், பெறுபவளாகவும் Passive partner)  இருக்கிறாள். ஒரு உற வின்தன்மை, நேரம் எல்லாவற் றையும் தீர்மானிப்பது ஆண்தான் … பெண்ணின் பங்களிப்பு இதில் குறைவு.  நீதிமன்றம் குறிப்பிட்டிருக் கும் இல்லற உறவில் விருப்பமில்லாத பெண்களின் குறையைக் கூட (Frigidity) எளிதில் சரிசெய்து விட முடியும். பெண்களின் மற்ற பாலியல் குறைபாடுகளும் சரிசெய்யக் கூடிய வையே.
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில், 2008ம் ஆண்டு 88 விவாகர த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன் எண்ணிக்கை 2013ல், 715 ஆக உயர்ந் துள்ளது. இந்த 715 வழக்குகளில் பெண்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு காரணமாக விவா கரத்து கேட்டிருக்கும் வழக்குகள் ஐந்தோ ஆறோதான். ஆண்களை குற்றம் சாட்ட வேண்டும் என்பதோ, ஆண்களின் குறை பாடுகள் சரி செய்ய முடியாதவை என்று பயமுறுத்து வதற்காகவோ இதைச் சொல்லவில்லை. தாம்பத்தியத்தில் பெரும்பொறுப்பு வகிக்கிற ஓர் ஆண், தன்னைப் பரி சோதித்துக் கொண்டு குறைகள் இருந்தால் சரி செய்து கொள்ள முன்வர வேண்டும் என்பது தான் இதில் முக்கியம்…’’
ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபி த்துவிட முடியுமா?
‘‘மருத்துவரீதியாக ஓர் ஆண், தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியா து. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடை முறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல் லை. சிலர் தன்பாலின விருப்பம் கொண்ட ஹோமோ செக்ஷு வலாகஇருப்பார்கள். சிலர் போ தைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள்… சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபடமுடியாது. மற்ற பெண்களிடம் நார்மலாக இருப் பார்கள் (Selective impotence). இதுபோன்ற நபர்களைப் பரி சோதித்தால் ஆரோக்கிய மாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும்.பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமு றையில் சரியாகச்செயல்படுபவராகவும் இருக்கலா ம்.
பாலியல்உறவில் மனம் பெரும்பங்கு வகிப்பதுதான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இப்பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற் றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடி யும்…’’
 
ஆண்மலட்டுத்தன்மைக்கும் ஆண்மை யின்மைக்கும் என்ன வித்தியாசம்?
‘‘ஆண்மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடைய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத் தன்மை இ ருக்கலாம். ஒருபெண்ணுடன் உறவு கொள்ளமுடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொ ண்டிருக்கலாம். இதில் இன்னொரு விஷயம். ஆண்மையின்மை கார ணமாக விவாகரத்து கேட்கமுடியும். மலட்டுத்தன்மையைக் காரண ம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது…’’

திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை சாத்தியம் தானா?
பிறப்பு இறப்புச்சான்றிதழ்கள் சட்டமாக்கப்பட்டுள்ளன. திருமணப் பதிவும் சட்டமாக்கப்பட்டு நடை முறையில் உள்ளது. அதே போல, திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையும்சட்டம் ஆக்கப்பட்டால்தான் இந்தப் பிரச்ச னைக்குத் தீர்வு கிடைக்கும். அதை த்தான் நீதியரசர் கிருபாகரன் கூறி யிருக்கிறார். பெண் வீட்டார் மாப்பி ள்ளை வீட்டாரிடம் ‘உங்கள் மகன் ஆண்மகன்தானா?’ என்று கேட்க முடியாது. ஏன், மாப்பிள்ளை யின் வீட்டாருக்கே கூட தெரியாது. சில வீடுகளில், மாப்பிள்ளையின் குறை யை மறைத்துத் திருமணம் செய்து வைப்பதும் உண்டு. அதனால், பரி சோதனை சட்டமாக்கப்பட்டால் இந் த வழக்குகளின் விகிதங்கள் பெருமளவும் குறைய வாய்ப்பிருக்கி றது…’’

தம்பதி என்ன செய்ய வேண்டும்?
‘‘துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத் து வரவேண்டும். நான்கு சுவர்களு க்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. தம்பதிக் குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்க ளாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங் களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்…’’
ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

‘‘இன்று மருத்துவம் பலவிதத்திலும் முன்னேறி இருக்கும் நிலையில் ஆண்மைக்குறைவுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்து விடுகி றது. இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அதனால், 90% பேர் கவுன்சலி ங் கொடுத்தாலே குணமாகி விடுவார்கள். 5% பேருக்கு மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள் தேவைப்படும். மீதி 5% பேர் மட்டுமே கொஞ்சம் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய வர்கள். அத ற்கு, பிரச்னை என்னவென்று முதலில் மருத்துவ ருக்கு தெரியவேண்டும். பிரச்சனையை மனதுக்கு ள்ளேயே வைத்துக்கொண்டு மறைக்க முயற்சிப்ப து, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்க ளோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவு க்கு வெளியே இன்னொருவருடன் தொ டர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல் கள் அல்ல…’’
பாலியல் கல்வி ஏன் அவசியம்?

‘‘பாலியல் கல்வி என்றவுடனே பதறிப் போய் அதெல்லாம் தப்பு என்று சொல் கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பாலியல்கல்வியில் கிளர்ச்சியூட்டுகி ற படங்களை காட்டப்போவதில்லை … கதைகள் சொல்லப் போவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களது உடல்பற்றிய அறிவுகொஞ்சமாவது இருக்கவேண்டும். விளையாட் டுப் பிள்ளைகளாக இருந்து திடீரெ ன வாலிப வயதுக்குள் நுழையும் ஓர் ஆணும் பெண்ணும் திடீரென உடல் மாற்றங்களால் குழப்பமடை கிறார்கள். இதைப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு…’’
இப்போது நடக்கிற சம்பவங்கள் திருமணமாகாதவர்களை குழப்பாதா?
‘திருமணத்துக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரையோ, பாலியல் சிகிச்சை மருத்துவரையோ சந்தித்து தனக்கிருக் கும் சந்தேகங்க ளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்ச னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம்காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். ரகசியமாக இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா என்று தேடி போலி மருத்துவர்களிடம் மாட்டிக் கொண்டு பணத்தை யும் ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள். அதை யெல்லாம் தவிர்க்க இந்த வழக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்பு கிறேன்!’’
தயக்கம் என்ன?
குழந்தையின்மைக்கான பரிசோதனைக்கு முன் வருவதில் ஆண்களுக்கு இருக்கும் அதே தயக்கம், இந்த விஷயத்திலும் இருப்பதாக ச் சொல்கிறார் உளவியல் ஆலோ சகர் வசந்தி பாபு. மாற்றம் தேவை ப்படுகிற விஷயங்கள் குறித்தும் பேசுகிறார் அவர்.‘ ‘பிரச்சனைனு சொல்லிக்கிட்டு கணவன்-மனைவி ரெண்டுபேரும் வருவாங்க. தன க்குத்தான் பிரச்னைங்கிற மாதிரியே இருக்கும் மனைவியோட அணுகுமுறை. பேசிப்பார்த்தா, கணவருக்குத்தான் பிரச்னைங்கிறது தெரிய வரும். குழந்தையில்லைங்கிற நிலை மையில ஒரு பெண் தன்கிட்ட பிரச்சனை இரு க்கலாம்னு சந்தேகப்பட்டு பரிசோதனைகளு க்குத் தயாராகிற மாதிரி, ஆண்மைக் குறை பாடுகள் விஷயத்துல ஒரு ஆணால தைரியமா முன் வர முடியறதில்லை.
ஆண்மைக்குறைபாடுங்கிறதை ரெண்டு வித மாபார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணுக்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோச மான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்னைகள், அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாமப் போகறது ஒரு வகை.  உண்மையிலேயே உடம்புல பிரச்னைகள் இருந்து, அதனால தாம்பத்திய உறவுல ஈடுபட முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறை பாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலாம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பை யில கோளாறு’னு ஒரு பெண் தய ங் காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்னைகளை வெளி யில சொல்லத் தயாராகணும். கவுன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்னைகளும் தீர்க் கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக்கம். ஆலோசனைக்கு வந்தாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான்…’’  

Tuesday, June 9, 2015

குண்டாக விரும்புவோர்


குண்டாக விரும்புவோர், இவற்றை செய்தால் மூன்றே மாதங்ளில் வியப்பான மாற்ற‍ங்கள் காணலாம்
குண்டான உடலைக் குறைப்பது தான் இப்போது பல
பெண்களுக்கும் பெரும் பிரச்சனை யே. ஆனால் இளைத்த‍ உடல் வாகு உள்ள‍வர்கள் குண்டாக விரும்பினா ல், அது உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம். அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும் பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச்சின்ன லட்டுகளாக ப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்கு சூரணம் ஒருசிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் 3 வேளைகள் சாப்பிடவும். ச்யவனபிராஷ்லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிட வும். 

தினம் சிறிதுதேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள் ளவும். தினம் இரு வேளை 5 பாதாம், ஒரு முட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம். வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவு கள் செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பி டவும்.
காபி, டீயைக் குறைக்கவும். ராத்திரியி ல் கைப் பிடியளவு கொண்டைக் கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இவற்றை யெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம் காண்பீர்கள.

கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!


இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு. எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அது எல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத் தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும் என்கிறார் தேனி, காமயகவுண்டன்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கே.சிராஜுதீன். 
  சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும். அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
  குடல்புண் மற்றும் உணவுக்குழாயில்் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள்வைக்க உதவும். கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.
  இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.
 பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்ததுள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (angular cheilitis) குணமாகும்.  சர்க்கரை நோய் கட்டுப்படு்ம். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
  கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.
  கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும்  உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின்சி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது. 
  கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.  இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும்.  சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் (primary complex) காசநோயினைக் கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மருத்துவர் சிராஜுதீன் பகிர்ந்துகொண்ட உணவுமுறையை டாக்டர் விகடன் வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் சுப்ரமணியன்.
கேழ்வரகுக் கூழ்
தேவையானவை: கேழ்வரகு   200 கிராம், தண்ணீர்  4 டம்ளர், மோர் (அ) காய்ச்சிய பால்  3 டம்ளர், சின்ன வெங்காயம்  6, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  தேவையான அளவு, பச்சை மிளகாய்  3, கடுகு  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை நீரில் நன்றாக ஊறவைத்து, மெல்லியத் துணியில் கட்டி, முளைக் கட்டவும். முளை விட்டதும், கடாயில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும். இதில், கெட்டியாக இருக்கும் அளவுக்கு நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறத்தில் வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கடைசியில் மோர் (அ) பால் சேர்த்து இறக்கவும். 
கேழ்வரகு பாதாம் கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு  200 கிராம், பாதாம் பருப்பு  50 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர்  3 டம்ளர், சின்ன வெங்காயம்  6, சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  தேவையான அளவு, பச்சை மிளகாய்  3, கடுகு  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை  தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும். இதைக் கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும். பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். இதை நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். மோர் சேர்த்து இறக்கவும். 
சிறுதானியக் கஞ்சி
தேவையானவை: சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு  தலா 50 கிராம், மோர் (அ) காய்ச்சிய பால்  3 டம்ளர், தண்ணீர்  4 டம்ளர், சின்ன வெங்காயம்  6 முதல் 8, சீரகம்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  தேவையான அளவு, பச்சைமிளகாய்  3, கடுகு  ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய்  2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு தேவையான அளவு.
செய்முறை: சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுக்க வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப் பொடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும். 
கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். பிறகு மோர் (அ) பால் சேர்க்கவும். இதேபோல், சிறுதானியங்களைத் தனித்தனியாக கஞ்சி தயாரித்துப் பருகலாம்.
நன்றி-டாக்டர் விகடன்