Labels

Sunday, July 10, 2016

பிளட் பிரஷரை குறைக்கும் தர்பூசணி!

பிளட் பிரஷரை குறைக்கும் தர்பூசணி!


ரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை நிறத்திலான உணவுகள் பலவற்றை உடலுக்குக்குக் கெடுதல் என்பார்கள். ஆனால், வெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.
வெள்ளைப் பூசணிக்காயை ஜூஸாக்கி வெல்லம்,ஏலக்காய்த்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்றுப்புண் தீரும். அதுமட்டுமல்லாமல், பெண்களின் வெள்ளைப்போக்கு, ரத்தம் – சீழுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற வியாதிகளையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் குணப்படுத்தும்.
தர்பூசணியின் வெள்ளை நிற சதைப்பாகம் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது. மேலும், உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கக்கூடிய தன்மை கொண்டது. மற்ற பழங்களில் இல்லாத சத்துகள் பலவும் தர்பூசணியில் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுக்கூடியது தர்பூசணி.

Wednesday, December 2, 2015

அரிசி சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள்



5 அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழநதைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால்
மஞ்சள்காமாலை வரும் என்று சில பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. அதே நேரம் இப்பழக்கம் ஆரோக்கியமானதும் இல்லை. 
 
அரிசியைமெல்லுவதால் பல சத்துக்குறைவுநோய்கள் ஏற்படும். எப்போதும் அரிசியை மென்று கொண்டி ருந்தால் பசி குறைந்துவிடும். அரிசியில் மாவுச்சத்து ஒன்றுதான் பிரதானம். இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது.  இதனால் ரத்தசோகை, பார்வைக் குறைபாடு, தோல்நோய்கள், புரத சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறைநோய்கள் என்றுபல நோய்கள் குழந்தைகளைத்தாக்கும் அபாயம் உள்ள‍தால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.