Labels

Friday, September 26, 2014

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!



மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு… முடிவில் தாம்பூலம்… இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.
  உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.
மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு, நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.
சித்த மருத்துவம் ‘காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர் அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.
‘மரத்தில் காய்க்கும் வயாகரா’ எனச் சீனர்கள் மாதுளையையும், ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும் நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில், செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள்  நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள் என்பது புரிந்தது!
கவனம்!
  நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
‘குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக் கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால் சரிசெய்யலாம்.
நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!

Tuesday, September 9, 2014

பெண்களின் காம உணர்ச்சிகளை விரைவாகத் தூண்டும் உணவுகள்


நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளு க்கும் அதிகதொடர்புள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக  உணர்வுகளை தரும் உணவு களை உட்கொண்டு வாழ்ந்த னர்
ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப் பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழ
முடியும்.ஒரு குறிப்பிட்ட வயதி ற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத்தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ் க்கையில் தடுமாற்றங்க ள் ஏற்படும்.எனவே லிபி டோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்ற னர் நிபுணர்கள்.
ஆவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமி ன்கள் உள்ளன. இது டெஸ்டோ ஸ்ட்டிரான் உற்பத்தியை அதிக ரிக்கிறது.அதேபோல் இதில் உள்ள பொட்டாசியம் பெண்க ளின் தைராய்டு சுரப்பியின் நி லையை சமநிலையில் வைத்தி ருக்கும். பாலுணர்வு சக்தி யை உற்சாகமாக வைத்திருக்க உத வும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் பெண்களின் உற்சாகத்திற்கு அதிக பலன்தரக்கூடிய பழமாகும். இந்த பழத்தில் உள்ள பி வைட்டமி ன்கள், ரிபோஃ ப்ளோவின், பொட்டாசியம் போன்ற வை டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹா ர்மோன்களின் உற்பத்தியை தூண்டுகி றது. அதைத் தவிர வாழைப்பழத்தின் வடிவம் கூட பெண்களின் உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒருவித கார ணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
துளசி இலைகள்
துளசி இலைகளில் உள்ள மரு த்துவகுணம் பெண்களின் பாலு ணர்வை குறைபாட்டினை நீக்கு கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இரு ப்பதோடு தலைவலியை போக்குமாம்.பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் குறை பாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தி யை உற்சாகப்படுத்துகிறதாம்.
பாதாம் பருப்பு
பாதம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்ப டும் குறைபாட்டினை நீக்குகிறதாம். தவிர பெண்களின் லிபி டோ சக்தியை ஊக்குவிக்கி றதாம்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஈஸ் ட்ரோ ஜன் ஹார்மோன் சுரப் பை அதிகரிக்கிறதாம். சோ யாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது.இது மெனோபாஸ் கா லத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைக ளை குறைக்கிறதாம்.
பெண்களின் செக்ஸ் உணர்வுக ளை குறையாமல் பார்த்துக் கொள்கிறது போஃப்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது.