Labels

Tuesday, February 24, 2015

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!



மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு
மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள்எளிதில் சீரணம்ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்து களைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி,இடுப்புவலி, தலை வலி என பல உபாதைகள் உருவாகும். இப்பிரச்சனைக் கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. தினமும் படு க்கைக்குச்செல்லும்முன் பாலில் இந்தப்பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச் சிக்கல் தீரும்.
மேலும் கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சமஅளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலசசிக்கல் சரியா கும்.

முகப்பருக்களுக்கு காரணமான உணவு வகைகள்



பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக்கும் உறவைபற்றி வாக்குவாதம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால்
நாம் உண்ணும் உணவிற்கும், நம் சருமத்திற்கும் தொடர்பு இருப்பதில் எந்தஒரு மாற்று கருத்தும் இல்லை.
சாக்லெட், பர்கர், பொரித்த உணவுகள் மற்றும் இன்னும் பல சுவையான உணவுகளால் பருக்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும் என்று பலரும் நம்புகின்றனர். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக் கிறது.
செனை பசுக்களில் இருந்து எடுக்கப் படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் ஹார்மோன்கள் அதிகளவில் இருப்பதால், பருக்களுடன் பால் பொருட்களுக்கு தொடர்பு இருப்பது நம்பப்படுகிறது.
தால், அது ஹார்மோனில் ஏற்ற இறக்கங்களை உண்டா க்கும்.மிட்டாய், பிஸ்கட் அல்லது வெள்ளை பிரட்டை போன்ற பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஊக்கு விக்கும் வகையை சேர்ந்தவை என்ப 
ல் சிறிதளவு உண்மை யும் கூட இருக்கிறது. சாக்லெ ட்டில் பால் பொருட்கள், சுத்தரிக்கப்பட்ட சர் க்கரை மற்றும் காப்ஃபைன் உள்ள து.அதனால் பருக்கள் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கும் பருக்களையும் மோசம டையச் செய்யும். பருக்கள் வருவதற்கு சாக்லெட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதி 
இவை மூன்றுமே பருக்கள் உரு வாக காரணமாக இருக்கும் பொருட்கள். எண்ணெய் பசையுடன், ஸ்டார்ச் அதிகமாக உள்ள பிரெஞ்சு ப்ரைஸில் சுத்தரிக்கப்பட்ட கார் போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இவை பருக்களை உருவாக்கும்.
அதிகளவில் இறைச்சியை உண்ணும் போது, அவை பருக்கள் உருவாக காரணமாகஅமையும். மே லும் இறைச்சி சாப்பிடுவதால், உடலில் உள்ள அமிலக் கார க் குறியீடு இருக்கவேண்டிய அளவை விட, அதிகமாக உயர்த்திவிடும்.

Monday, February 16, 2015

ஆண்களே! இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா?

Posted By Muthukumar ,On Feb 16,2015

அனைவருக்குமே நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அப்படி இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், மனதை மற்றும் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அன்றாடம் உடற்பயிற்சி செய்து வருவதுடன், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வர வேண்டும். அதுமட்மின்றி, முறையான உடல் மற்றும் சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். மேலும் மன அழுத்தத்தை தவிர்த்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் கவலையை மறந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும், முறையான உடல் மற்றும் சரும பராமரிப்புக்களை ஆண்கள் சரியாக பின்பற்றாததால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகின்றனர். நீங்கள் அப்படி முதுமைத் தோற்றத்துடன் காணப்படுகிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளவற்றை படித்து மனதில் கொண்டு அதன்படி நடந்து வாருங்கள். நிச்சயம் நீங்கள் நீண்ட நாட்கள் இளமையுடனேயே காணப்படுவீர்கள். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும். சரும செல்கள்
பாதிப்படையாமல் இருந்தால், முதுமைத் தோற்றம் தள்ளிப் போவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். அதற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வந்தால், சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கலாம். சருமத்தில் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகம் பட்டால், சருமத்தின் அழகு பாதிக்கப்படுவதோடு, சரும செல்கள் பாதிப்படைந்து அதனால் சரும புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. ஆகவே இத்தகைய நிலையைத் தவிர்க்க வெளியே செல்லும் போது, சன் ஸ்க்ரீன் லோசனை சருமத்திற்கு தவறாமல் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கோடைக்காலத்தில் சரும செல்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், ஆண்கள் இக்காலத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். ஆண்களும் தவறாமல் சருமத்திற்கு ஸ்கரப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடும் இளமையாகவும் இருக்கும். ஆகவே ஆண்களே உடனே சருமத்திற்கு பொருத்தமான ஸ்கரப்பை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்பட்டால், சருமத்தின் மென்மைத்தன்மை நீங்குவதோடு, சருமத்தில் சுருக்கங்களும் காணப்படும். ஆகவே தினமும் தவறாமல் சருமத்திற்கு ஆண்களும் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். அதிலும் வைட்டமின் ஈ நிறைந்த மாய்ஸ்சுரைசர் க்ரீமை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. ஆண்களை இளமையுடன் வெளிக்காட்டுவதில் ஹேர் ஸ்டைரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. பொதுவாக ஆண்கள் இளமையுடன் காட்சியளிக்க ஹேர் கட் செய்து, ஷேவிங் செய்து கொண்டால், இளமையுடன் காட்சியளிப்பீர்கள். இருப்பினும் சரியான ஹேர் ஸ்டைலுடன், தாடி மற்றும் மீசையை ட்ரிம் செய்து இருந்தாலும் ஆண்கள் அழகாக காணப்படுவார்கள். தினமும் 6-8 டம்ளர் தண்ணீரைக் குடித்து வந்தால், சருமத்தில் நீர்ச்சத்து இருப்பதோடு, சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். தற்போதைய காலத்தில் ஆண்கள் சரியாக தூங்குவதில்லை. அப்படி தினமும் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், வயதான தோற்றத்துடன் தான் காணப்பட நேரிடும். ஆகவே தினமும் தவறாமல 7-8 மணிநேரம் தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, உடற்பயிற்சியையும் தவறாமல் பின்பற்றி வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், உடலுறுப்புக்களுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் இருக்கும். உணவுகளில் முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுத்து, சருமம் தளர்ச்சி அடைவதைத் தடுக்கும். மேலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த உணவுகளான செர்ரி, பெர்ரிப் பழங்கள், தக்காளி, பூண்டு போன்றவற்றை உட்கொண்டு வந்தால், சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காணப்படும். * தினமும் தக்காளி சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவி வந்தால், முகம் பொலிவோடு இருக்கும். * கற்றாழை வீட்டில் இருந்தால், அதன் ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் நீங்கும். * வெள்ளரிக்காயை தினமும் கண்களின் மேல் 10 நிமிடம் வைத்து வந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன இருக்கும். * ஆலிவ் ஆயிலைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஆண்கள் அழகாக… ஈஸி டிப்ஸ்


ண்களின் சருமத்துக்கு என அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் வந்துவிட்டன. ஆண்கள் தங்கள் சருமத்துக்குச் செய்ய வேண்டிய அழகுக் குறிப்புகள் என்ன? அழகு சாதனப் பொருட்களை எப்படித் தேர்வு செய்வது?
ஆண்கள் பொதுவாகத் தலையில் எண்ணெய் தேய்ப்பது கிடையாது. பொடுகு அதிகரிக்க, இதுவும் ஒரு காரணம். சூடான உடலைக்கொண்டவர்கள், தலைக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலையில் எண்ணெய் வைக்கக் கூடாது.
மன அழுத்தம், தலைக்கு எண்ணெய் தேய்க்காதது, சரிவிகித உணவு உண்ணாமை, தூக்கமின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பிக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சாப்பிட்டுவந்தால், நன்றாக முடி வளரும்.
ஹேர் ஸ்டரெயிட்டனிங், ஹேர் கலரிங் போன்றவை செயற்கையான அழகு மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டு, முறையாகத் தூங்கி எழுந்தாலே, நன்றாக முடி வளரும்.

ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான  பிரச்னை, முகப்பருக்கள். பருக்களை உடைப்பது, கிள்ளுவது, அதன் மீது எண்ணெயைத் தடவுவது கூடாது. கொழுப்புச் சத்து மிகுந்த  பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்த்தால் போதும். பருக்கள் சில நாட்களில் மறைந்துவிடும்.

நகங்களை ஒழுங்காக வெட்டாமல் இருப்பதாலும் நகம் கடிப்பதாலும் நகத்தில் சேரும் அழுக்குகள், சாப்பிடும்போது உடலுக்குள் செல்கிறது. சிலருக்கு கியூட்டிகில்ஸ் (Cuticles) எனப்படும் வெள்ளை நிற சிறிய அளவிலான சதை நகத்தின் ஓரத்தில் வளரும். இவற்றைக் கண்டிப்பாகக் கடிக்கக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை நகங்க
ளைச் சீராக வெட்ட வேண்டும்.
தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். எனவே நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடு தண்ணீர் நிரப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து, பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், வெடிப்பு குறையும்.  அலுவலகம் செல்பவர்கள் தரமான ஷூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஷூ மாற்றக் கூடாது. இறுக்கமான ஷூ அணியக் கூடாது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயில் இருக்கும். அந்த நேரத்தில் பைக் ஓட்டுபவர்கள் முகத்துக்கும் கைகளுக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம்கொண்டவர்கள் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தக் கூடாது. ஸ்லிப்பர் போடுபவர்கள், பாதங்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தினால், சருமத்தின் கடினத்தன்மை மறைந்து, மென்மையாக மாறும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டாம்.
பேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள அழுக்குகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கரும்புள்ளிகள் நீக்கப்படும். நீராவி பிடிப்பதால் முகம் புத்துணர்ச்சி அடைவதோடு பிரகாசமாகவும் இருக்கும். முகத்தைச் சுத்தப்படுத்தவே ஃபேஷியல்.
அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வறண்டு போகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வது சருமத்தைப் பொலிவாக்கும். பழங்கள் அதிகம் சாப்பிடுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படுக்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உதட்டுக்குத் தடவுதவன் மூலம், உதடு கருமையாகமல் தடுக்க முடியும்.

Saturday, February 7, 2015

மூக்கு



மனிதன் உயிர் வாழ அடிப்படையான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே
ருவாகிறது. நடுச்சுவர் எலும்பு மூக்கை இருபாகமாக பிரிக்கிறது. மேல் பாகத்தில் `நேசல் போன்’ என்ற எலும்புள்ளது. உள் பக்ககுழாய்போன்ற அமை ப்பின் இரு பக்கமும்தசை இடம் பெற்றிருக்கிறது. இந்த தசை ` ஏ.சி’ மெஷின்போல் செயல்படும். அதாவது சுவாசிக்கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத்தில் பெரிதாகும். ஜலதோ ஷம் ஏற்படும் போது தொற்றுக்கிருமி களின் தாக்குதலால் தசை வீங்கிவிடும். காற்று செல்லும் வழியை அடைத்து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக் கடைப்பு என்கிறோம்.
மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும் பால் ஆன`ஏர்பில் கேவிட்டி’ என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கும். கிருமித்தொற்று எதுவும் இல் லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆஅச் என்ற தும்மலோடு ஜலதோஷம்வந்தால், அத்திரவத்தின் அட ர்த்திஅதிகரிக்கும். வெளியேவராமல்சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொ ந்தரவு தரும் இதற்கு ஆன்டிபயாடிக் மாத்தி ரைகள் கொடுப்போம். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங் கள் இருக்கக்கூடும். அந்த காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்.
ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள் பட `இன்பெக்டிவ் சைனசைட்டீ ஸ்’ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புறசூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய`ரைனோ சைனசைட்டீஸ்’ தோன்றும். அடிக்கடி தும்மல்ஏற்படுதல், தலைபாரம், மூக்குஒழுகுதல், காதி ல் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போ ன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவிட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதிவரை வளர்ந்து அதி க தொந்தரவு தரும்.

இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய பொதுவாக எக்ஸ்ரே எடுக்கப்படு வதுண்டு. சிடி.ஸ்கேன் எடுத்தால் மூக்கின் மேல் எலு ம்பு, நடுச்சுவர், தசை வளர்ச்சி, சைனஸ் பாதிப்பு போன்ற அனைத்தையும் கண்டறிந்து துல்லியமான சிகிச்சை பெறலாம். சைனஸ் பகுதியில் சளி அடைப்பு இருந்தால் `என்டோஸ்கோபிக்
endoscopic sinus surgery
சைனஸ்சர்ஜரி’ தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலாம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத் தலாம்.
தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குற ட்டை! இதன் கொர்.. கொர் .. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால்,அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட் டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட் டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் . தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணி க்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டானபெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிரு க்கிறார்கள்.
இப்போது சிறுவர் சிறுமியர்கள் மைதானங்களுக்கு சென்று ஓடிஆடிவிளையாடுவதில்லை. உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உ ணவுகளைஉண்பது போன்றவைகளால் இளையதலை முறை குண்டாகிவருகிறது. எதிர்காலத்தில் அவர்க ளும் குறட்டையால் பாதிக்கப் படும் சூழல் உருவாகும்.
தூங்கும்போது சுவாசப்பாதை யில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளி வருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண் டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரண ங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக் கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்த மாக வெளிவருகிறது.
ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்து விடும். இது இயல்பான, இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிகளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்புநிலை மிகவும் குறைந்து விடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சு விட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்தி லே உயிர் பிரியும் சூழல் ஏற்பட லாம்.
குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப் போதுதடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இரு ப்பார்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் `ஸ்லீப் அப்னீயாசி ன்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்து விட்டால் மூளைக்குசெல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்ப ன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால்மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆ கியவற்றின் செயற்பாடுகளும் பாதி க்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோ ய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகளும் தோன்றக்கூடு ம்.
குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக `ஸ்லீப்ஸ்டெ டி ’ செய்யவேண்டும். வீட்டிலே அவர்களை தூங்க வைத்து ` பாலிசோம்னா கிராபி’ என்ற கருவி மூலம் பாதிப்பை அளவி டலாம். ஆஸ்பத்திரியில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.’ செய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்த படியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம்.
சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச் சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ள மான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திண றல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கி னால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.
குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல்பரும னை கட்டுக்குள்கொண்டு வரவேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத்த தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும்.
நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கி றோம். அதனால் மூக்கில் ஏற் படும் நோய்களையும், குறட் டையையும் அலட்சியம் செய் யாமல் அவ்வப் போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்று விட வேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர் வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்.