Labels

Sunday, January 18, 2015

கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய தெரியாத சங்கதிகளும் சுவாரஸ்யத் தகவல்களும்!



பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும். மேலும் ஒவ்வொரு
கர்ப்பிணிகளுக்கும் அது வேறுபடும். அதில் ஒரு சிலரு க்கு இனிப்பான உணவுகளும், சிலருக்கு உப்பு அதிகம் இருக்கும் உணவுகளும் மற்றும் சிலருக்கு புளிப்புமிக்க உணவுகளும் சாப்பிட விருப்பமாக இருக்கும். ஆனால் இப்படி கர்ப்பி ணிகளுக்கு சாப்பிட தோன்றும் உணவுகளைக் கொண்டும் என்ன குழந்தை வயிற்றில் வளர்கிறது என்பதைகணிக்க முடியும் என்பது தெரியுமா?
ஆம், நம் நாட்டில் வயிற்றில் வளர்வது ஆண்குழந்தையா, பெண் குழந்தையா என்று பரிசோதித்துபப் பார்ப்பது பெ ருங்குற்றம். ஏனெனில் சிலர் பெண் குழந்தை வயிற்றில் இருந்தால், கருச்சிதைவு செய்துவிடுகின்றனர். என வே இந்திய அரசாங்கமானது இதனை தடை செய்து விட்டது. ஆனால் நம் முன் னோர்கள் அக்காலத்தில் கர்ப்பிணிகளின் ஒருசில செயல்களை வைத்து, வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தக வல்கள்!!!
அதில் ஒன்று தான் அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்கள். இவற்றிற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை. இருப்பினும் பலருக்கு இந்த வகையான கணிப்பு சரியானதாக உள்ளது. இங்கு வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப்பிடத் தோன்றும் உணவுகள் பட்டியலி டப்பட்டுள்ளன.
புளிப்பு: 

புளிப்பாகஇருக்கும் உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், வயிற்றில் ஆண் குழந்தை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
உப்பு:
கர்ப்பிணிகளுக்கு இனிப் பான உணவுகளைப் பார்த்து அதிகஆசை எழுந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்றும், அதுவே உப்பு மிக்க உணவுகளின் மீது ஆசை அதிகம் இருந்தால், இது ஆண் குழந்தை என்றும் ஒருசில நம்பிக்கை உள் ளது.
காரம்:
இதுவரை காரமான உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தவர்கள், திடீரென்று கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை அதிகம் உட் கொள்ள ஆசைப்பட்டால், அதுவும் ஆண் குழந்தை உள்ளது என்ப தை சுட்டிக் காட்டும். வேண்டுமானால் ஆண் குழந்தை பெற்ற தாய்மார்களை கேட்டுப் பாருங்கள்.

எலுமிச்சை:
எலுமிச்சையைப் பார்த்த தும் அதை உடனே ருசித் தாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறதா? அப்படியென்றால் உங்கள் வயிற்றில் ஆண் குழந்தை உள்ளது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அனுபவமிக்க தாய்மார்களிடம் கேட்டால், இதை சொல்வார்கள்.
இறைச்சி :
கர்ப்ப காலத்தில் அசைவ உணவு களின்மீது நாட்டம் அதிகம் இருந் தால், அதுவும் ஆண் குழந்தை வயிற்றில் வளர்ந்து வருகிறது என்று கருதப்படுகிறது.
ஊறுகாய் :
சில ஆண் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பி ணிகளுக்கு ஊறுகாய் பார்த் தாலே அதை அள்ளி சாப்பிட வேண்டுமென்றுதோன்றும். ஏனெனில் அதில்உப்பு, காரம், புளிப்பு போன்றவை அதி கம் நிறைந்துள்ளது.

ஆரஞ்சு :
நிறைய கர்ப்பிணிகளுக்கு ஆரஞ்சு பழத்தின் மீது விருப்பம் அதிகம் இருக்கும். இதற்கு எவ்வித ஆதாரமு ம் இல்லாவிட்டாலும், பல பெண்கள் இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதா க சொல்கின்றனர். இவையே வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் சாப் பிடத் தோன்றும் உணவுகள். நீங்கள் வேறு ஏதாவது அனுபவத்தைப் பெற்றிருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment