Posted on Dec 2, 2015 by Muthukumar
5 அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழநதைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால்
மஞ்சள்காமாலை வரும் என்று சில பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. அதே நேரம் இப்பழக்கம் ஆரோக்கியமானதும் இல்லை. அரிசியைமெல்லுவதால் பல சத்துக்குறைவுநோய்கள் ஏற்படும். எப்போதும் அரிசியை மென்று கொண்டி ருந்தால் பசி குறைந்துவிடும். அரிசியில் மாவுச்சத்து ஒன்றுதான் பிரதா
னம். இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. இதனால் ரத்தசோகை, பார்வைக் குறைபாடு, தோல்நோய்கள், புரத சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறைநோய்கள் என்றுபல நோய்கள் குழந்தைகளைத்தாக்கும் அபாயம் உள்ளதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.