Labels

Sunday, May 31, 2015

தைராய்டு

Posted By Muthukumar,On May 31,2015
THYROID
1.தைராய்டு என்பது என்ன?:
நமது உடம்பில் பலவிதமான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன.அவை ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்தி , அந்த செலகளை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான், தொண்டையில் இருக்கும் ‘தைராய்டு ‘ சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன.இது சுரக்கும் ஹார்மோனின் பெயர் ‘ தைராக்ஸின்’.
2. தைராய்டு சுரப்பியின் பயன் என்ன?:
இதயத்தை சீராக வைக்க உதவுகிறது. இனப் பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகின்றது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், ‘தைராக்ஸின்’ ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
3.தைராய்டு குறைபாடு எத்தனை வகை?:
தைராய்டு குறைபாட்டில் இருவகை உள்ளது. ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது.மற்றொன்று -தைராய்டு குறைவாக சுரப்பது.
4.தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?:
முடி உதிர்தல், மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதைவிட வித்தியாசமாக இருக்கும்.மாதவிடாயில் பிரச்சினை, கழுத்து வீக்கம், மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மனக் கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலை ஏற்படும்.
5. தைராய்டின் பாதிப்புகள் என்ன?:
அதிகமாக தைராக்ஸின் சுரந்தால் எடை குறையும். இதயத் துடிப்பு அதிகமாகும். கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள்,குழந்தையின்மை, வயிற்றுப் போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். தைராக்ஸின் குறைவாக சுரந்தால், மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவது, அதிகமான முடி உதிர்வது, மலச் சிக்கல், உடல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
6. தைராய்ட் பிரச்சினை உள்ளோர், தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?:
தைராய்டு குறைவாக சுரக்கும் பிரச்சினை இருந்தால், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காளி ஃப்ளவர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது.
7. தைராய்டு காரணத்தால்தான் கழுத்துப் பகுதி வீக்கமடைகிறதா?:
தைராய்டு சுரப்பியின் செயல்பாடு, முறையாக இல்லாதபோது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும்.சில நேரங்களில் அயோடின் குறைபாட்டாலும் கழுத்து வீக்கம் ஏற்படலாம்.
8. தைராய்டு பிரச்சினை இருந்தால், மூட்டுகள் வலிக்குமா?:
மூட்டு வலி மற்றும், கடுமையான உடல்வலி போன்றவை தைராய்டு பிரச்சினைக்கான அறிகுறிகள்தான். அதோடு, தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடு, உடலில் ஆங்காங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.
9. தைராய்டு சுரப்பியில் கட்டிகள் வருமா?:
ஆம்!. தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு. அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம்.இது மட்டுமில்லாமல், தைராய்டு சுரப்பியில் நேரடியாகக்கூட புற்றுநோய்க் கட்டிகள் வரும்.
10. தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியுமா?:
பொதுவாக, மக்களுக்கு வரக்கூடிய குறைபாடு, தைராக்ஸின் குறைவாக சுரப்பது. இக்குறைபாடு ஒருமுறை வந்துவிட்டால், தைராக்ஸின் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிடவேண்டும்.ஆனால், தைராக்ஸின் அதிகமாக சுரந்தால், மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் முற்றிலுமாகக் குணப்படுத்தலாம்.

கேழ்வரகு


undefined
கேழ்வரகு தொன்றுதொட்டே நமது நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. நமது முன்னோர்கள் உடலுறுதியுடன், அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம், அவர்களது உணவு பழக்கம் தான். அந்த வகையில், அவர்களது உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு. களி, அடை மற்றும் கூழ் என, இன்றும் நமது கிராமங்களில் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது கேழ்வரகு.
சிறிய தானியமானாலும், இதில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவில், அதிகமாக உட்கொள்ளப்படும் தானியங்களில் கோதுமை, அரிசி தான். கோதுமை மற்றும் அரிசியுடன் ஒப்பிடுகையில், கேழ்வரகில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில், அத்தியாவசிய தாதுக்கள் காணப்படுகின்றன. கேழ்வரகில், அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளது.
இதுவே, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு. ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை, குறைக்க வல்லது எனவும், அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதோடு இதில் உள்ள, டிரைப்டோபன் என்ற அமினோ அமிலம், உடலிலுள்ள கொழுப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்து செயலாற்றுகிறது. மேலும் இதில் காணப்படும், அதிகப்படியான நார்ச்சத்து, உணவை எளிதில் செரிக்க உதவுகிறது. இது வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் உகந்த உணவாகும்.
சைவ உணவுகளில், கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு, மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை, விரைவில் குணமாக்க வல்லது இந்த கேழ்வரகு. கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெதியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், உள்ளன. இவை நுரையீரலில் ஏற்படும், அதிகப்படியான கொழுப்பை குறைக்கின்றன. மேலும் இதிலுள்ள தெரோனைன் கொழுப்பு ஏற்படுவதை தவிற்கிறது.
கேழ்வரகில் எந்த சைவ உணவிலும் இல்லாத அளவில் இரும்புச்சத்து காணப்படுகிறது. இரத்த சோகை போக்க இது மிகவும் ஏற்றது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்தை உடல் உறுஞ்சுவதற்கு உதவுகிறது. கேழ்வரகின் மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு பண்பு, பொதுவாகவே உடலை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால், டென்ஷன், மைக்ரேன் என்ற ஒற்றை தலைவலி, இன்சோம்னியா போன்றவற்றை தவிர்க்க இது உதவுகிறது. கேழ்வரகில் மனித உடலிற்கு நன்மை செய்யும், பல அமினோ அமிலங்கள் உள்ளன.
இதிலுள்ள ஐசோலியூசின் உடலில் சிதைவடைந்த திசுக்களை குணப்படுத்தவும், ரத்தம் உருவாகவும், எலும்புகள் உருவாகவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மெதியோனைன் வேறு எந்த தானியத்திலும் காணப்படாத ஒரு இன்றியமையாத அமினோ அமிலமாகும். இது கொழுப்பை கட்டுப்படுத்துவதிலும், சல்பர் சத்தை கொடுக்கவும் வல்லது. இவ்வாறாக பல நோய்களை குணப்படுத்தும், ஈடுஇணையற்ற கேழ்வரகு நமக்கு எளிதில் கிடைக்கிறது.